பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

கோவையில் கமல் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம் தடுத்து நிறுத்தம் 

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :24 மார்ச் 2019, 2:36 pm IST

சிங்காநல்லூர்: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியலை தலைவர் கமல்ஹாசன் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்.

மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் கட்சியின் தேர்தல் அறிக்கையினை ஞாயிறு அன்று (24.03.19) கோவையில் வெளியிடுவேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.  

இந்நிலையில் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம் தடுத்து நிறுத்தபட்டுள்ளது.

ஞாயிறு காலை கோவை வந்த கமல்ஹாசன் சிங்காநல்லூர் அருகே உள்ள ராமநாதபுரம் என்னும் இடத்தில் கட்சியினரின் கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் அந்த கூட்டத்தை தடுத்து நிறுத்தினர்.

முறையான அனுமதியின்றி நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறி தேர்தல் பறக்கும் படையினர் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.

இதன் காரணமாக அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.