மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வேட்பு மனு படிவங்களில் ஓபிஎஸ்- இபிஎஸ் கையெழுத்திடுவதற்கு எதிரான மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு 

வேட்பு மனு படிவங்களில் ஓபிஎஸ்- இபிஎஸ் கையெழுத்திடுவதற்கு எதிராக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி தொடுத்த மனு மீது விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 மார்ச் 2019, 11:46 am

DIN

புது தில்லி: வேட்பு மனு படிவங்களில் ஓபிஎஸ்- இபிஎஸ் கையெழுத்திடுவதற்கு எதிராக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி தொடுத்த மனு மீது விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வேட்பு மனு ஏ, பி படிவங்களில்  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) ஆகியோர் கையெழுத்திட தடை கோரி அக்கட்சியின் முன்னாள் எம்பி கே.சி. பழனிச்சாமி தில்லி உயர்நீதிமன்றத்தில் அண்மையில் வழக்குத் தொடுத்தார்.

அதில், "2017, செப்டம்பர் 12-இல் நடைபெற்ற கட்சியின் பொதுக் குழுவில் யாருடைய கருத்தையும் கேட்காமல் அதிமுக விதிகள் திருத்தப்பட்டன. அதிமுக சட்ட விதி 43-இன்படி விதிகளைத் திருத்த பொதுக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுச் செயலாளர் நியமனம் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யப்படும். இதன்படி, தேர்தல் தொடர்பான வேட்பு மனு படிவத்தில் பொதுச் செயலாளர் மட்டுமே கையெழுத்திட முடியும். எனவே, மக்களவைத் தேர்தலில் வேட்பு மனு "ஏ' மற்றும் 'பி' படிவங்களில் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் கையெழுத்திடுவதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும், அவர்கள் கையெழுத்திடும் வேட்பு மனு "ஏ' மற்றும் "பி' படிவங்களை நிராகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கண்ணா முன் கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. 

இதனிடையே, இந்த வழக்கை உடனடியாக விசாரிக்கக் கோரி கே.சி. பழனிச்சாமி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு  மனு மீது தில்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, எதிர்மனுதாரர்கள் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் சார்பில் வழக்குரைஞர் பாலாஜி ஸ்ரீனிவாசன், தேர்தல் ஆணையத்தின் சார்பில் பி.சி. சோப்ரா உள்ளிட்டோர் ஆஜரானார்கள். அப்போது, மனுதாரர் கே.சி.பழனிச்சாமி தொடர்புடைய மனுக்கள், தேர்தல் ஆணையத்தால் ஏற்கெனவே நிராகரிக்கப்பட்டுள்ளதையும், தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி மார்ச் 25-ஆம் தேதி நடைபெறும்  என நீதிபதி யோகேஷ் கண்ணா தெரிவித்தார்.

அதன்படி இந்த வழக்கானது திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.