டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மகள் கனிமொழி வெற்றிக்காக திருச்செந்தூர் கோவிலில் சாமி கும்பிட்ட அம்மா ராஜாத்தி 

தனது மகள் கனிமொழி வெற்றிக்காக திருச்செந்தூர் முருகன் கோவிலில் அவரது தாயாரான ராஜாத்தி சாமி கும்பிட்ட சுவராஸ்யம் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:29 am

DIN

திருச்செந்தூர்: தனது மகள் கனிமொழி வெற்றிக்காக திருச்செந்தூர் முருகன் கோவிலில் அவரது தாயாரான ராஜாத்தி சாமி கும்பிட்ட சுவராஸ்யம் நிகழ்ந்துள்ளது.

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மறைந்த திமுக தலைவரான கருணாநிதியின் மகளான கனிமொழி, தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

மறுபுறம் அதிமுக கூட்டணியில் பாஜக மாநிலத் தலைவரான தமிழிசை சவுந்திரராஜன் அவரை எதிர்த்து களம் காண்கிறார்.          

முதன்முறையாக கனிமொழி நேரடித் தேர்தல் களத்தில் இறங்கியுள்ள நிலையில், தமிழிசையும் முதன்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

எனவே இருவருமே வெற்றி பெற வேண்டுமென்ற முனைப்பில் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 24-ஆம் தேதி திருச்சந்தூர் முருகன் கோவிலுக்கு வருகை தந்த தமிழிசை, அங்கு நடைபெற்ற சத்ரு சம்ஹார யாகத்தில் பங்கேற்றார்.  இந்த யாகமானது எதிரிகளை

வீழ்த்துவதற்கு நடைபெறுவது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அங்கிருந்த கோவில் யானையிடம் ஆசி பெற்ற அவர் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.

இந்நிலையில் தனது மகள் கனிமொழி வெற்றிக்காக திருச்செந்தூர் முருகன் கோவிலில் அவரது தாயாரான ராஜாத்தி சாமி கும்பிட்ட சுவராஸ்யம் நிகழ்ந்துள்ளது.

தனது உறவினர்களுடன் கோவிலுக்கு வந்த அவர் அங்கு நடைபெற்ற பூஜையில் பங்கு பெற்றார்  கனிமொழியின் வெற்றிக்காக அவர் வேண்டிக் கொண்டார் என்று தெரிகிறது.

வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவு பேசிய கருணாநிதியின் மகளும், கடவுள் மறுப்புக் கொள்கை  கொண்டவருமான கனிமொழியின் வெற்றிக்காக அவரது தாயார் கடவுளிடம் பிரார்த்தனை செய்வது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.