இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கோவையில் உள்ள வாக்குப் பதிவு எந்திரங்கள் தேனிக்கு மாற்றப்பட்டதாக புகார்: திமுக, காங்கிரஸ்  போராட்டம் 

கோவையில் உள்ள வாக்குப் பதிவு எந்திரங்கள் தேனிக்கு மாற்றப்பட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறாரகள்.

News image
Updated On :7 மே 2019, 3:58 pm

DIN

கோவை: கோவையில் உள்ள வாக்குப் பதிவு எந்திரங்கள் தேனிக்கு மாற்றப்பட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறாரகள்.

கடந்த மாதம் 18-ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப் பதிவு எந்திரங்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கோவையில் உள்ள வாக்குப் பதிவு எந்திரங்கள் தேனிக்கு மாற்றப்பட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறாரகள்.

கோவையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை தேனிக்கு மாற்றியதாக திமுக கூட்டணி கட்சிகள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, தேனி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக கூட்டணி கட்சியினரின் போராட்டத்தை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சித் தலைவர் பல்லவி அங்கு வருகை தந்தார். அவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டார். 

அதேநேரம் வாக்குப்பதிவு ஆகாத 50 இயந்திரங்களே தேனிக்கு மாற்றபட்டது என்றும், தேர்தல் ஆணையத்தில் இருந்து வந்த கடிதத்தின் அடிப்படையிலேயே இயந்திரங்கள் மாற்றபட்டதாகவும்,  கோவை வருவாய் அலுவலர் சவுந்தர்ராஜன் தொலைக்காட்சி ஒன்றுக்கு விளக்கமளித்தார்.

இதே விஷயத்தை தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹுவும் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.