கமல்ஹாசன் கோட்சேவை பற்றி சொன்னதற்காக அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர் துள்ளிக் குதிக்கிறார். கமல்ஹாசன் அவர்களுடைய நாக்கை அறுத்து விடுவேன் என்று சொல்கிறார். இதை விட ஒரு வன்முறையே இருக்க முடியாது. நீதிமன்றம் தாமாகவே அவர் மீது ஒரு வழக்கைப் பதிவு செய்து விசாரிக்கலாம். கோட்சே ஒரு கொலைகாரர் மற்றும் தீவிரவாதி என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அவர் மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற போது ஒரு இந்து அமைப்பில் உறுப்பினராக இருந்தார். எப்படி இந்து சமூகத்தில் மகாத்மா காந்தி ஒரு அகிம்சைவாதியாக, வன்முறை எதிர்ப்பாளராக இருந்தாரோ, அதேபோல, அந்த இந்து சமூகத்தில் கோட்சே ஒரு வன்முறையாளராக, கொலைகாரராக, தீவிரவாதியாக இருந்தார் என்பதே உண்மை.