கோதாவரி - காவிரி இணைப்பு சாத்தியப்படாத திட்டம் என்பதால், ராசிமணலில் அணைக்கட்ட காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கோதாவரியை இணைப்பதால் காவிரி டெல்டா பாசனத்துக்கு தீர்வு காணவும் முடியாது, சம்பந்தப்படுத்தவும் முடியாது. ஆகவே, ராசிமணலில் அணைக்கட்டுவது ஒன்று தான் தமிழகத்தையும் காவிரி டெல்டாவையும் பாதுகாக்க முடியும் என்பதை உணர்ந்து நடைபெறவுள்ள காவிரி ஆணையக் கூட்டத்தில் ராசிமணலில் அணைக் கட்டுவதை வலியுறுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






