நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்ய உள்ளதாக காங்கிரஸ் உறுப்பினர் தெரிவித்தார்.
2019 மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சாா்பில் கன்னியாகுமரி தொகுதியில் ஹெச்.வசந்தகுமாா் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.
இந்நிலையில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றாா். பின்னா் செய்தியாளா்ளைச் சந்தித்தபோது கூறியதாவது:
மக்களவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டுள்ளதால், நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்ய உள்ளேன் என்றார்.
ஒரே உறுப்பினா் இரண்டு பதவிகளை வகிக்கக் கூடாது என்பதால் ஹெச்.வசந்தகுமார், எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்வுள்ளது குறிப்பிடத்தக்கது.