ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,200 கன அடியில் இருந்து 14,784 கன அடியாக அதிகரித்துள்ளது.

News image
மேட்டூர் அணை
Updated On :10 நவம்பர் 2019, 10:28 pm

DIN

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,200 கன அடியில் இருந்து 14,784 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து 8,500 கன அடியில் இருந்து 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 10,200 கன அடியில் இருந்து 14,784 அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.11 அடியாகவும், அணையில் தற்போது 92.58 டிஎம்சி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது. 

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 14 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் தற்போது 92.58 டிஎம்சி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது.

நீர்வரத்தால் ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.