நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பேனர் வைக்கத் தடையில்லை! - டிராபிக் ராமசாமியின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

அரசு சார்பிலும் பேனர் வைக்க தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

News image

உச்ச நீதிமன்றம்

Updated On :15 நவம்பர் 2019, 2:34 pm IST

அரசு சார்பிலும் பேனர் வைக்க தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் பேனர் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதிக்கப்பட்ட நிலையிலும், கடந்த மாதம் சீன அதிபர் ஷி ஜின்பிங் தமிழகம் வருகை தந்ததையடுத்து, குறிப்பிட்ட இடங்களில் பேனர் வைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 

இதனை எதிர்த்து, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அரசு சார்ந்த நிகழ்ச்சிகளிலும் பேனர் வைக்க தடை விதிக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

இந்த வழக்கினை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங் தமிழகத்திற்கு வருகை தந்து திரும்பி சென்றுவிட்டார். இந்த நேரத்தில் இந்த வழக்கை விசாரிக்க முகாந்திரம் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் இது அரசின் கொள்கை சார்ந்த விஷயம் என்றும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் குறிப்பிட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.