மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அலட்சியத்தால் நடந்த விபரீதம்! பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றுக்குள் வைத்து தைக்கப்பட்ட ஊசி!

ராமநாதபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் பிரவசத்திற்காக சேர்க்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் ஊசியை வைத்து தைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :21 நவம்பர் 2019, 5:50 am

ராமநாதபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் பிரவசத்திற்காக சேர்க்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் ஊசியை வைத்து தைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரம்யா என்ற பெண் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சையின் மூலமாக அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் பிரசவ அறுவை சிகிச்சையின்போது, செவிலியர்கள், பெண்ணின் வயிற்றுக்குள் ஊசி வைத்து தைத்ததாக பெண்ணின் உறவினர்கள் ஆரம்ப சுகாதாரத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். செவிலியர்கள் இருவரின் அலட்சியத்தால் பெண் பாதிக்கப்பட்டுள்ளார் என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

இதையடுத்து, காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பெண்ணிற்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்து ஊசியை வெளியே எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செவிலியர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று சுகாதார இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.