நடிகை தேவயானி மற்றும் நடிகர் நகுலின் தாயார் லட்சுமி ஜெயதேவ் இன்று காலை காலமானார்.
சென்னையில் வசித்து வந்தவர் லட்சுமி ஜெயதேவ். இவர், கடந்த சில காலங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று காலை லட்சுமி ஜெயதேவ் திடீரென உயிரிழந்தார்.
கடந்த ஆண்டு தேவயானியின் தந்தை ஜெயதேவ் உயிரிழந்த நிலையில் இன்று அவரது தாயார் காலமானார். லட்சுமி ஜெயதேவ் மறைவு தேவயானி மற்றும் நகுலின் குடும்பத்தை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மறைந்த லட்சுமி ஜெயதேவுக்கு தேவயானி, நகுல், மையூர் என 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் தேவயானி, நகுல் ஆகியோர் திரைத்துறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.