ஜெயங்கொண்டம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., கே.கே.சின்னப்பன் உடல்நலக்குறைவால் காலமானார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ கே.கே சின்னப்பன். இவர் 1991ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் கே.கே.சின்னப்பன் காங்கிரஸில் இருந்து விலகி 1993-ல் அதிமுகவில் இணைந்தார்.
இவர் தமிழ்நாடு அரசு உறுதிமொழிக் குழு தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் எம்.எல்.ஏ., கே.கே.சின்னப்பன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.