நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வெற்றிலைகளைக் கொண்டு சனிக்கிழமை சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
நாமக்கல் நகரில் 18 அடி உயரம் கொண்ட ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி நின்ற கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். தங்ககவசம், வெள்ளிக்கவசம் சாத்துப்படி, முத்தங்கி அலங்காரம், வெண்ணைக்காப்பு அலங்காரம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டும், வெற்றிலையால் ஆன அலங்காரம் செய்யப்படவில்லை.
இந்த நிலையில், திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், ஒரு லட்சத்து எட்டு வெற்றிலைகளைக் கொண்டு அலங்காரம் செய்ய முன்வந்தார். இதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை காலை முதல், திருச்சியில் உள்ள ஓர் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. வாழைமட்டையில் வெற்றிலையை பொருத்தி அவற்றை ஆஞ்சநேயருக்கு சாத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்ட பிறகு நண்பகல் 12 மணி முதல் 1 மணியளவில், வெற்றிலை அலங்காரம் செய்யப்படுகிறது. இந்த அலங்காரமானது ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி வரை(அபிஷேகத்துக்கு முன்பாக) சுவாமி மீது சாத்தப்பட்டிருக்கும்.
இதுகுறித்து கோயில் உதவி ஆணையர் பி.ரமேஷ் கூறியது: புரட்டாசி மாதப் பிறப்புக்கு முன்னதாக வரும் சனிக்கிழமை உற்சவ பெருவிழாவாகக் கொண்டாடப்படும். அதனையொட்டி, திருச்சியைச் சேர்ந்த உபயதாரர் மூலம் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

