அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 

அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 

அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

அதேசமயம் மற்ற மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக லேசான மழை வாய்ப்புண்டு. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். குமரி கடல், அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசுவதால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். 

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கொடைக்கானலில் 6 செ.மீ., மழைப்பதிவாகி உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com