சென்னை சூளைமேட்டில் மதுபோதையில் காரை ஓட்டி வந்து மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளாக்கியதாக நடிகர் சக்தி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இயக்குநர் பி.வாசுவின் மகன் நடிகர் சக்தி. இவர் தொட்டால் பூ மலரும், நினைத்தாலே இனிக்கும், சிவலிங்கா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சக்தி, செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு சென்னை சூளைமேடு இளங்கோவடிகள் தெருவில் செல்லும்போது, அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த செல்வநாதன் (45) என்பவர் காரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு, காரை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதை கவனித்து அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதி மக்கள், சக்தியின் காரை தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விபத்தை ஏற்படுத்திய சக்தியின் காரை பறிமுதல் செய்தனர்.
மேலும் மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக சக்தி மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர் சொந்த ஜாமீனில் அவரை விடுவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோல்வியை நியாயப்படுத்துகிறார் டிரம்ப்! ஈரான் குற்றச்சாட்டு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |

மதிப்புமிக்க 6 நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ. 65,000 கோடியாக சரிவு!
கடைசி ஓவரில் லக்னௌ அணி த்ரில் வெற்றி!
வீடியோக்கள்

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

