சென்னை: மூன்று மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக வியாழனன்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்படுகிறார்.
அதேபோல சென்னை இணை ஆணையர் கோவிந்த்ராவ் தஞ்சை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்படுகிறார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திருஞானம் சுகாதாரத்துறை இணைப் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.