அ.தி.மு.க அமைச்சரவை என்பது சுற்றுலா அமைச்சரவையாக செயல்படுகிறது: சீறிய ஸ்டாலின் 

ஆளும் அ.தி.மு.க அமைச்சரவை என்பது சுற்றுலா அமைச்சரவையாக செயல்படுகின்றது என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அ.தி.மு.க அமைச்சரவை என்பது சுற்றுலா அமைச்சரவையாக செயல்படுகிறது: சீறிய ஸ்டாலின் 

நெல்லை: ஆளும் அ.தி.மு.க அமைச்சரவை என்பது சுற்றுலா அமைச்சரவையாக செயல்படுகின்றது என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இன்று (01-09-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் 304வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் நெற்கட்டு செவலில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்து, அவர்களது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசியதாவது

சிப்பாய் கலகத்துக்கு முன்பாகவே, 'வெள்ளையனே வெளியேறு' என சுதந்திரப் போராட்டத்தில் குரல் கொடுத்தவர்களில் ஒருவராக விளங்கியவர் பூலித்தேவர் அவர்கள்.அவருடைய 304வது பிறந்தநாள் விழாவில், அவருடைய திருவுருவச் சிலைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய மரியாதையை செலுத்தி, மணிமண்டபத்தில் அமையப்பெற்றிருக்கும், அவருடைய வாழ்க்கைக் குறிப்பேடு விவரங்களை நான் பார்க்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றேன்.

வங்கிகள் ஒருங்கிணைப்பு குறித்து, வங்கியில் பணிபுரிந்துக் கொண்டிருக்கும் ஊழியர்கள் எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள். எனவே, தொடர்ந்து என்ன நடக்கவிருக்கிறது என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

முதலமைச்சர் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும், 8 அமைச்சர்கள் சுற்றுப்பயணம் செல்லப்போவதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக்கிறது.

ஏற்கனவே, இந்த ஆட்சியில் கடந்த 8 ஆண்டுகாலத்தில் இரண்டு உலக முதலீட்டாளர் மாநாடு நடந்திருக்கிறது. அந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் 5.42 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், இதுவரையில் அது என்ன நிலையை - எப்படிப்பட்ட சூழ்நிலையை அடைந்திருக்கின்றது என்பது பற்றி, ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்று தொடர்ந்து நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். நாட்டு மக்களும் அதைத்தான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அதுகுறித்து எந்த அக்கறையும் எடுத்துக்கொள்ளாமல் வெளிநாட்டிற்கு ஏதோ பொழுதுபோக்குக்காக செல்வதுபோல் சென்றுள்ளனர். இன்னும் சொல்லவேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் இருக்கும் அமைச்சரவையை, அ.தி.மு.க அமைச்சரவை என்று சொல்ல முடியாது, சுற்றுலா அமைச்சரவைதான் என்று சொல்லவேண்டிய நிலையில் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.

நாங்குநேரி இடைத்தேர்தல் குறித்து தேர்தல் தேதி அறிவித்ததற்குப் பிறகு தி.மு.க தலைமையும், காங்கிரஸ் தலைமையும் கலந்துப்பேசி அதற்குப் பிறகு முடிவு அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com