அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

வங்கிகள் இணைக்கப்படுவதால் வேலையிழப்பு ஏற்படாது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

வங்கிகளை இணைக்கும் நடவடிக்கை காரணமாக எந்த ஒரு ஊழியரின் வேலையும் பறிபோகாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார். 

News image
Updated On :2 செப்டம்பர் 2019, 3:04 am IST

வங்கிகளை இணைக்கும் நடவடிக்கை காரணமாக எந்த ஒரு ஊழியரின் வேலையும் பறிபோகாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார்.
 வரித் துறை அதிகாரிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், பங்கேற்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
 கடந்த வாரத்தில் 10 பொதுத் துறை வங்கிகளை இணைப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதை முன்னிறுத்தி பல்வேறு சந்தேகங்களும், கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. அதனை முன்னிறுத்தி அரசுக்கு எதிராக எழுந்துள்ள கருத்துருவாக்கத்துக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது.
 மத்திய அரசு முன்னெடுத்துள்ள வங்கி இணைப்பு நடவடிக்கை காரணமாக நாட்டில் உள்ள வங்கிகளின் செயல்பாடுகள் மேம்பாடு அடையுமே தவிர, எந்த விதமான எதிர்விளைவுகளும் ஏற்படாது.
 இணைப்பு நடவடிக்கை காரணமாக சில வங்கிகள் மூடப்படக் கூடும் என்று தகவல் பரப்பப்படுகிறது. அது முழுக்க, முழுக்க தவறான கருத்து.
 எந்த ஒரு வங்கியும் மூடப்படாது. வங்கிகள் இணைப்பை காரணம் காட்டி எந்த ஊழியரையும் பணி நீக்கம் செய்யப் போவதில்லை. இந்தக் கருத்தை திட்டவட்டமாகவும், உறுதிபடவும் தெரிவிக்கிறேன். வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட்ட பிறகு அவற்றுக்கு கூடுதல் முதலீடு அளிக்கப்படும்.
 ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கை: ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. ஆட்டோ மொபைல் சார்ந்த சேவை மற்றும் பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைப்பது குறித்து கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால், அதுகுறித்து ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவு எடுக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் என்னால் வரி குறைப்பை அமலாக்க இயலாது என்றார்.
 நாட்டின் நிதிச் சூழல் மோசமாகிவிட்டதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியது குறித்து பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.