டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மதுரை அருகே காவல்துறையினர் தாக்கியதில் கோழிக் கடை உரிமையாளர் பலி

மதுரை அருகே காவல்துறையினர் தாக்கியதில் கோழிக் கடை உரிமையாளர் பலியானார். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:22 pm

DIN

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி கடைவீதியில் பல ஆண்டுகளாக கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவர் அப்துல்ரஹீம் (70). இன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகளை திறக்கக்கூடாது என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அப்துல் ரஹீம் கோழி விற்பனை செய்ய கடையை  திறந்துள்ளார். 

அப்போது அவ்வழியாக ரோந்து சென்ற காவல்துறையினர் கடையை மூடச் சொல்லியும், கடையின் முன் இருந்தவர்களையும் கிளம்ப படி கூறியுள்ளனர். இதை அப்துல் ரஹீம் உறவினர் ஒருவர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது காவல்துறையினர் அவரை தாக்கியுள்ளனர். இதை தடுக்கச் சென்ற போது அப்துல் ரஹீம் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

Story image

அப்பகுதியில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு அப்துல் ரஹீம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அப்துல் ரஹீம் உடலை கருப்பாயூரணி கடைவீதியில் சாலையின் குறுக்கே வைத்து அப்பகுதி மக்கள் 300க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். 

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி அப்துல் ரஹீமை தாக்கிய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் கருப்பாயூரணி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.