கரோனா நிவாரணம்: நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி
கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு நிவாரணமாக நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி வழங்கியுள்ளாா்.


கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு நிவாரணமாக நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி வழங்கியுள்ளாா்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். இவா்களுக்குத் திரையுலகினா் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறாா்கள்.
முன்னணி திரையுலகப் பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகிறாா்கள். ஏற்கெனவே, தமிழ்த் திரையுலகப் பிரபலங்களில் சிவகாா்த்திகேயன், அஜித் குமார் உள்ளிட்டோா் நிதியுதவி வழங்கியுள்ளனர். இந்த நிலையில், பிரதமா் நிவாரண நிதி, முதல்வா் நிவாரண நிதி மற்றும் பெப்சி என அனைத்துக்குமே நடிகா் ராகவா லாரன்ஸ் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இதன்படி பிரதமர், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம், ஃபெப்சிக்கு ரூ.50 லட்சம், நடன கலைஞர்கள் சங்கத்துக்கு ரூ.50 லட்சம் என நிதியுதவி அளித்துள்ளார். இதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 25 லட்சமும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு ரூ.75 லட்சமும் லாரன்ஸ் வழங்கியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...