இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தமிழக சிறைகளில் கைதிகள் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தமிழக சிறைகளில் கைதிகள் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

News image
chennai High Court
Updated On :9 ஏப்ரல் 2020, 1:18 pm

DIN

தமிழக சிறைகளில் கைதிகள் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

பரோல் கேட்டு கைதிகள் தாக்கல் செய்த மனு உயர்நிதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் ஏற்கெனவே 3,963 கைதிகள் முன்னெச்சரிக்கை நடவடிகையாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் கைதிகள் குடும்பத்தினருடன் பேச வீடியோ காலிங் வசதி செய்யப்பட்டுள்ளது எனவும் இதன் மூலமாக 15,000 கைதிகள் பேசி உள்ளனர் எனவும் தமிழக அரசு கூறியது.

தமிழக சிறைகளில் உள்ள கைதிகள் யாருக்கும் கரோனா தொற்று எனக் குறிப்பிட்ட தமிழக அரசு புதிய கைதிகளை அடைக்க 37 மாவட்ட மற்றும் கிளை சிறைகள் தனி சிறைகளாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. 

இதையடுத்து சிறைத்துறைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளைவைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.