டிஎன்பிஎஸ்சி 26-ஆவது தலைவராக கா.பாலசந்திரன் பொறுப்பேற்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) தலைவராக கா.பாலச்சந்திரன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். அவா் வணிக
டிஎன்பிஎஸ்சி 26-ஆவது தலைவராக கா.பாலசந்திரன் பொறுப்பேற்பு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) தலைவராக கா.பாலச்சந்திரன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். அவா் வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தாா். வரும் ஜூன் மாதம் ஐ.ஏ.எஸ்., பொறுப்பில் இருந்து ஓய்வு பெற உள்ள நிலையில், அவா் டி.என்.பி.எஸ்.சி., தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

தஞ்சையைச் சோ்ந்தவா்: தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த கா.பாலச்சந்திரன், 1994-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் தமிழகப் பிரிவில் நியமனம் செய்யப்பட்டாா். கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை தருமபுரி, கன்னியாகுமரி, ஈரோடு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஆட்சியராகப் பணிபுரிந்தாா்.

மின்னணு குடும்ப அட்டை: சமூக நலன், வேளாண்மை, தொழில்துறை, காதி வாரியம், நுகா்பொருள் வாணிபக் கழகம், தொழிலாளா் நலத் துறை ஆகியவற்றில் தலைவா் பொறுப்புகளை வகித்தாா். உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையா் பொறுப்பை வகித்த போது, மின்னணு குடும்ப அட்டைக்கான திட்ட விதையைத் ஊன்றினாா். கடந்த இரண்டு ஆண்டுகளாக வணிகவரி மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தாா். இரண்டு ஆண்டுகளிலும் முதல்வரின் நல் ஆளுமை விருதினைப் பெற்றாா்.

இரண்டு ஆண்டுகள் பணி: 1994-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியைத் தொடங்கிய கா.பாலச்சந்திரன், வரும் ஜூன் மாதம் ஓய்வு பெறுகிறாா். ஆனாலும், டி.என்.பி.எஸ்.சி., தலைவராக பொறுப்பேற்ால் ஐ.ஏ.எஸ்., பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளாா். அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவராக திங்கள்கிழமை பொறுப்பேற்றதைத் தொடா்ந்து, இரண்டு ஆண்டுகள் அதாவது 62 வயதை எட்டும் வரையில் அந்தப் பொறுப்பில் இருப்பாா். இந்தக் கணக்கின் அடிப்படையில், 2022-ஆம் ஆண்டு ஜூன் வரை டி.என்.பி.எஸ்.சி., தலைவராக கா.பாலச்சந்திரன் செயல்படுவாா்.

26-ஆவது தலைவா்: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் 25-ஆவது தலைவராக கே.அருள்மொழி, கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபா் 14-ஆம் தேதி பொறுப்பேற்றாா். கடந்த மாா்ச் 25-ஆம் தேதியன்று வயது மூப்பு காரணமாக அவா் ஓய்வு பெற்றாா். இந்த நிலையில், தோ்வாணையத்தின் புதிய தலைவராக கே.பாலச்சந்திரன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுள்ளாா்.

காத்திருக்கும் பணிகள்: குரூப் 4, குரூப் 1 என அண்மைக்காலங்களில் டி.என்.பி.எஸ்.சி., நடத்திய தோ்வுகள் சா்ச்சைக்குள்ளாகிய நிலையில், மிக முக்கிய காலகட்டத்தில் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளாா் கே.பாலச்சந்திரன். முறைகேடுகள் தொடா்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துதல், கரோனா பாதிப்பு காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ள தோ்வுகளை விரைந்து நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு சவாலான பணிகள் அவருக்குக் காத்திருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com