எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருச்சி காந்தி மார்க்கெட்டில் தீ: 8 கடைகள் எரிந்து நாசம்

திருச்சி: திருத்தி காந்தி மார்க்கெட்டில் திங்கள்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் 8 கடைகள் எரிந்து நாசமாயின.

News image
Updated On :20 ஏப்ரல் 2020, 6:51 am

DIN

திருச்சி: திருத்தி காந்தி மார்க்கெட்டில் திங்கள்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் 8 கடைகள் எரிந்து நாசமாயின. 

திருச்சி மாவட்டத்தின் பிரதான காய்கனி மற்றும் அனைத்து வகை பொருள்கள் கிடைக்கும் சந்தையாக இருப்பது காந்திமார்கெட். மளிகை, காய்கனிகள், பழங்கள், பலசரக்குகள், பிளாஸ்டிக், ஜவுளி என அனைத்துமே இந்த பகுதியில் மொத்தமாக கிடைப்பதால் சிறு வியாபாரிகள், பொதுமக்கள் என மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து இங்கு வந்து செல்வர். கரோனா முன்னெச்சரிக்கையாக இந்த மார்கெட் மூடப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், திங்கள்கிழமை மார்க்கெட்டிலிருந்து கரும்புகை வருவதை அப்பகுதியில் இருந்த மாநகராட்சி பணியாளர்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து வந்தனர். அதற்குள்ளாக மார்கெட்டிலிருந்த 8 கடைகள் முழுவதும் எரிந்து நாசமானது. ஒரு மணிநேரத்துக்கும் மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அணைத்தனர். 

மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.