மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

திருச்சியில் ஊடகப் பிரிவினருக்கு கரோனா பரிசோதனை

சென்னையில் ஊடகப் பிரிவைச் சேர்ந்த இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். 

News image
Updated On :21 ஏப்ரல் 2020, 7:01 am

சென்னையில் ஊடகப் பிரிவைச் சேர்ந்த இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். 

மேலும், தமிழக சுகாதாரத்துறை மூலம் ஊடகப் பிரிவினருக்காக சிறப்பு பரிசோதனை முகாம்களை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. 

மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு இந்த முகாமை தொடக்கி வைத்தார். முதல்கட்டமாக இந்த முகாமில், திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து நாளிதழ், வார இதழ், மாத இதழ், மாதமிருமுறை, வாரமிருமுறை இதழ் உள்ளிட்ட இதழ்களில் பணிபுரியும் புகைப்பட கலைஞர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. 

இதேபோல, காட்சி ஊடகத்தில் உள்ள அனைத்து தொலைக்காட்சி விடியோ ஒளிப்பதிவாளர்களுக்கும் கரோனை பரிசோதனை நடத்தப்பட்டது. 40 பேருக்கு ரத்த மாதிரகள் எடுத்து ரேபிட் கிட் கருவி மூலம் பரிசோதனை நடத்தப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.