இம்மலையை ஆண்ட வல்வில் ஓரி மன்னனுக்கு ஆண்டுதோறும் ஆடிப் பெருக்கு நாளன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் விழா எடுக்கப்படும். அதனை முன்னிட்டு அதிகாரிகள், பல்வேறு அமைப்பினர் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிப்பர். மேலும் ஆடிப்பெருக்கு விழாவும் இங்கு விமரிசையாக கொண்டாடப்படும். மேலும் அங்குள்ள கலையரங்கில் பல்துறை விளக்கக் கண்காட்சிகள், தோட்டக்கலைத் துறையின் மலர் கண்காட்சி, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், சமூக நலத்துறை சார்பில் பெண்கள், சிறுவர்களுக்கான போட்டிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். இந்த நிகழ்ச்சிகள் இரண்டு நாள்கள் தொடர்ச்சியாக நடைபெறும்.