பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தமிழகம் முழுவதும் 10-ம் தேதி காய்கறி சந்தைகளை மூட வியாபாரிகள் முடிவு

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10-ம் தேதி அனைத்து காய்கறி, பழம் மற்றும் பூச்சந்தைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட வியாபாரிகள்  முடிவு செய்துள்ளனர்.

News image
தமிழகம் முழுவதும் 10-ம் தேதி காய்கறி, பூக்கடைகளை மூட வியாபாரிகள் முடிவு
Updated On :4 ஆகஸ்ட் 2020, 7:51 am

DIN


சென்னை: தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10-ம் தேதி அனைத்து காய்கறி, பழம் மற்றும் பூச்சந்தைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட வியாபாரிகள்  முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் கோயம்பேடு சந்தையை திறக்க அனுமதி கோரி சென்னை புரசைவாக்கத்தில் நடந்த வணிகர் சங்க பேரமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தை மற்றும் மாவட்டங்களில் மூடப்பட்டிருக்கும் காய்கறி சந்தைகளை திறக்கக் கோரி ஆகஸ்ட் 10-ம் தேதி திங்கள்கிழமையன்று தமிழகத்தில் உள்ள அனைத்து காய்கறி, பழம் மற்றும் பூச் சந்தைகள் மூடப்படும் என்று தெரிவித்தார்.

தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு வரும் வகையில் இந்த அடையாள ஒரு நாள் போராட்டம் நடத்தப்படும். அப்போதும் அரசு செவிசாய்க்கவில்லை என்றால், தொடர் போராட்டம் நடத்தப்படும்.

கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்கும்பட்சத்தில், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் எடுக்க வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக உள்ளனர். தற்காலிகமாக அமைக்கப்பட்ட திருமழிசை சந்தையில் போதுமான வசதிகள் இல்லாததால் டன் கணக்கில் காய்கறிகள் வீணாகின்றன.

எனவே, மூடப்பட்ட கோயம்பேடு சந்தை மற்றும் மாவட்டங்களில் உள்ள சந்தைகளையும் திறக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 10-ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து காய்கறி, பூ மற்றும் பழச் சந்தைகள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.