ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

இ-பாஸ் வழங்க மாவட்டந்தோறும் இரு குழுக்கள்: முதல்வர் பழனிசாமி தகவல்

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை எளிமையாக்கும் வகையில் மாவட்டந்தோறும் இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார். 

News image
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
Updated On :6 ஆகஸ்ட் 2020, 7:42 am

DIN

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை எளிமையாக்கும் வகையில் மாவட்டந்தோறும் இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார். 

திண்டுக்கல்லில் இன்று நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்து மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து பேசிய முதல்வர் பழனிசாமி,

தமிழகத்தில் இ-பாஸ் பெறும் நடைமுறை எளிமையாக்கப்பட்டு வருகிறது. முன்னதாக இ-பாஸ் வழங்க ஒரு குழு மட்டுமே இருந்த நிலையில், தற்போது மாவட்டந்தோறும் இரு குழுக்கள் அமைக்கப்ட்டுள்ளது. அவசியத் தேவைகளுக்கு இ-பாஸ் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

அதேபோன்று, மாதம் ஒருமுறை இ-பாஸை புதுப்பித்தால் போதுமானது. வெளி மாநிலத்தில் உள்ள தொழிலாளர்களை தமிழகம் அழைத்து வரத் தடையில்லை. 

எனினும், மக்கள் இ-பாஸை அவசியத் தேவைகளுக்கு மட்டுமே உபயோகிக்க வேண்டும். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு அவசியம்' என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.