டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக உயர்வு

கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீா், மேட்டூா் அணைக்கு நீர்வரத்து 3,625 கன அடியில் இருந்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.35 அடி உயர்ந்துள்ளது.

News image
2-8-sl06dmettur_0611chn_121
Updated On :27 ஜனவரி 2024, 5:04 pm

DIN


சேலம்: கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீா், மேட்டூா் அணைக்கு நீர்வரத்து 3,625 கன அடியில் இருந்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.35 அடி உயர்ந்துள்ளது.

கா்நாடக மாநிலம், குடகு, மண்டியா, சாம்ராஜ் நகா் உள்ளிட்ட பகுதிகளிலும், கேரளத்தின் வயநாடு பகுதியிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. எனவே, அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்தும்,  கிருஷ்ணராஜசாகா் அணையிலிருந்தும் தண்ணீரை அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக, ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்துள்ளதால், பிரதான அருவி செல்லும் நடைபாதையின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புத் தடுப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன.

இந்நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 3,625 கனஅடியாக இருந்த நிலையில் நேற்று மாலை மாலையில் 5,000 கன அடி வீதமாக அதிகரித்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் நீர்மட்டம் 65.55 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 28.99 டிஎம்சி ஆக உள்ளது. 

அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கரித்து வருவதால், மீனவா்கள் காவிரியில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனா். செட்டிப்பட்டி, கோட்டையூா், பண்ணவாடி பரிசல் துறைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.