ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

புதுவையில் புதிதாக 276 பேருக்கு கரோனா தொற்று : மேலும் 2 பேர் உயிரிழப்பு

புதுவையில் புதிதாக 276 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

News image

276 new Coronavirus positive cases, two deaths reported in UT since last 24 hrs

Updated On :11 ஆகஸ்ட் 2020, 6:55 am

புதுவையில் புதிதாக 276 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
 
புதுவையில் 967 பேரை பரிசோதித்ததில் புதுச்சேரியில் 241 பேருக்கும், காரைக்காலில் 30 பேருக்கும், ஏனாமில் 5 பேருக்கும் என மொத்தம் 276 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,900 ஆக உயர்ந்துள்ளது. 

இதில் 2,277 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் புதுச்சேரி 874, ஏனாம் 72 என மொத்தம் 946 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே 91 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 3,532 ஆக  அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் ஒருவர், ஜிப்மரில் ஒருவர் என இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.