ஆனால் நன்னிலம் தாலுகா மருத்துவமனை மருத்துவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் அந்தப் பெண்ணிற்கு எக்ஸ்ரே, ஸ்கேன் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் செய்துள்ளனர். மருத்துவப் பரிசோதனைகள் முடிந்தபின், அறுவை சிகிச்சை செய்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து விட்டு, சுகப்பிரசவம் நடைபெறுவதற்கான அனைத்து சிகிச்சைகளையும் மேற்கொண்டு விட்டு சுகப்பிரசவம் நடைபெறும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தனர்.
மருத்துவர்கள் நம்பியது போலவே, முதல் குழந்தையை அறுவைசிகிச்சை மூலம் பெற்றெடுத்த அந்தப் பெண்ணுக்குச் செவ்வாய்கிழமை மதியம் சுகப்பிரசவத்தில் இரண்டாவது குழந்தை பிறந்தது. இது போன்ற நிகழ்வுகள் தற்போது மிகப் பெரிய மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கூட நடைபெறுவது அரிது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.