கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரத்த தான கொடைவள்ளல் விருதைப் பெற்ற திருச்சி ஆயுதப்படை காவலர்

திருச்சி ஆயுதப் படையில் காவலராகப் பணியாற்றி வரும் அரவிந்துக்கு, ரத்த தான கொடை வள்ளல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

News image
ரத்த தான கொடைவள்ளல் விருதைப் பெற்ற திருச்சி ஆயுதப்படை காவலர்
Updated On :28 ஆகஸ்ட் 2020, 11:06 am

DIN

திருச்சி ஆயுதப் படையில் காவலராகப் பணியாற்றி வரும் அரவிந்துக்கு, ரத்த தான கொடை வள்ளல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

நவல்பட்டு காவல் பயிற்சிப் பள்ளியில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருபவர் காவலர் அரவிந்த். இவர் 18 வயது முதல் தற்போது வரை வருடத்திற்கு  நான்கு முறை என  56 முறை தொடர்ந்து ரத்த தானம் செய்துள்ளார் . மேலும் இவர் கடந்த நான்கு வருடமாக ரத்ததான  தன்னார்வலர்களை ஒன்றிணைத்து  சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் ரத்த தானம் செய்து சிறந்த சமூக சேவைகளைச் செய்து வருகின்றனர். 

இவர் செய்து வரும் சமூக சேவையை பாராட்டும் விதமாக  தேசம் காப்போம் அறக்கட்டளையிடம் இருந்து தொடர் ரத்த தானம் கொடை வள்ளல் விருது  காவலர் அரவிந்துக்கு வழங்கப்பட்டது.

இந்த விருதினை நவல்பட்டு காவல் பயிற்சிப் பள்ளி முதல்வர்  முத்துக்கருப்பன், டிஎஸ்பி மனோகரன்  ஆகியோர் கவாத்து மைதானத்தில் பயிற்சிக் காவலர்கள் முன்னிலையில்  வழங்கி கௌரவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.