ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராமநாதபுரம் அருகே மகனை எரித்துக் கொன்ற தந்தை கைது

ராமநாதபுரம் அருகே பெற்ற மகனையே எரித்துக்கொன்ற தந்தையை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News image
கோப்புப்படம்
Updated On :30 ஆகஸ்ட் 2020, 5:30 am

DIN

ராமநாதபுரம் அருகே பெற்ற மகனையே எரித்துக்கொன்ற தந்தையை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளைப் பகுதி குஞ்சார வலசையைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் முனியசாமி (24). வாடகை வேன் ஓட்டுநர். இவர் அதே பகுதியான அக்காள்மடம் மீனவர் காலனியைச் சேர்ந்த மரியா அபிஷா (20) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அவர்களது மகன் துரை (ஒன்றரை வயது). முனியசாமி வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மரியா அபிஷாவின் சகோதரிக்குத் திருமணம் நடந்துள்ளது. அதற்கு செல்லக்கூடாது என மனைவியை முனியசாமி கண்டித்துள்ளார். ஆனால், கணவரின் தடையை மீறி மரியா அபிஷா சகோதரியின் திருமணத்துக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. மனைவி தனது பேச்சைக் கேட்காமல் அவரது சகோதரி திருமணத்துக்கு சென்றதால்
ஆத்திரமடைந்த முனியசாமி, மகன் துரையை தூக்கிச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் மகனுடன் சென்ற முனியசாமி வீடு திரும்பாததை அறிந்த மரியாஅபிஷா தேடியுள்ளார்.

 வீடு திரும்பிய முனியசாமியிடம் கேட்டபோதும் சரியான பதில் இல்லையாம்.
இதுகுறித்து சனிக்கிழமை காலையில் மரியாஅபிஷா அளித்த புகாரின் பேரில்
மண்டபம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது பெற்ற மகனையே
அடித்துக்கொன்று எரித்ததாக முனியசாமி கூறியுள்ளார். முனியசாமி அளித்த வாக்குமூலம் அடிப்படையில் அப்பகுதியில் குழந்தையின் சடலத்தை சனிக்கிழமை பகலில் கைப்பற்றி அதை பிரேதப் பரிசோதனைக்காக
ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பிவைத்தனர். இதுகுறித்து முனியசாமியிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.