ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கொடைக்கானலில் முழு ஊரடங்கு கடைப்பிடிப்பு

மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று கொடைக்கானலில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

News image
கொடைக்கானலில் முழு ஊரடங்கு
Updated On :30 ஆகஸ்ட் 2020, 9:33 am

DIN

மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று கொடைக்கானலில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதனால் கொடைக்கானல் முழுவதும் வெறிச்சோடிக் கிடக்கிறது. கொடைக்கானல் செண்பகனூர் பகுதியிலுள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் விநியோகம் செய்யாததால் லாரிகள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் கொடைக்கானல் காவல்துறையினர் நகரின் முக்கிய இடங்களான ஏரிச்சாலை, பூங்கா சாலை, மூஞ்சிக்கல், வெள்ளி நீர்வீழ்ச்சி, சாசிட்டி வியூ, ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.