ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மன்னார் வளைகுடா பகுதியில் ரூ. 5 கோடி மதிப்புள்ள கடல் வெள்ளரி அட்டைகள் பறிமுதல்

மன்னார் வளைகுடா வழியாக இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்ட ரூ. 5 கோடி மதிப்புள்ள கடல் வெள்ளரி அட்டைகளை கடலோரக் காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :30 ஆகஸ்ட் 2020, 7:06 am

DIN

மன்னார் வளைகுடா வழியாக இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்ட ரூ. 5 கோடி மதிப்புள்ள கடல் வெள்ளரி என அழைக்கப்படும் அட்டை வகை உயிரினங்களை கடலோரக் காவல்படையினர் சனிக்கிழமை மன்னார் வளைகுடா பகுதியில் நடுக்கடலில் மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்தனர்.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தை ஒட்டிய மன்னார் வளைகுடா கடல்பகுதியில் ஏராளமான பவளப்பாறைகள் இயற்கையாகவே அமைந்துள்ளன. கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பவளப்பாறைகளில் ஏராளமான அரிய வகை உயிரினங்கள், தாவரங்கள் உள்ளன. இவ்வகை  உயிரினங்களை பிடிக்கப்படுவதையும், வேட்டையாடப்படுவதையும் தடுக்கும் வகையில் அருகிவரும் உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டம் 2001- ஏற்படுத்தப்பட்டு இதில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது.

தடை செய்யப்பட்ட உயிரனங்களில் கடல் வெள்ளரி என்ற அட்டை வகையும் ஒன்றாகும். நிலத்தில் வாழும் மண் புழுவைப் போல கடல் பகுதியில் மீன்வளம் பெருக கடல் வெள்ளரியும் ஒன்றாக இருந்து வருகிறது. ஆபத்து விளைவிக்கும் கழிவுகளை பலவற்றையும் கடல் வெள்ளரிகள் உண்கின்றன. கடல் வெள்ளரிகள் வெளியிடும் கழிவுகள் கடலின் அடியில் வாழும் உயிரினங்களுக்கு உணவாக இருந்து வருகிறது.  

வெள்ளரிக்காய் போல் தோற்றம் கொண்ட அட்டைகள்  

வெள்ளரிக்காயைப் போல தோற்றம் அளிக்கும் இந்த வகை அட்டைகளுக்கு சர்வதேச அளவில் பெரும் கிராக்கி உள்ளது.  எனவே, மன்னார் வளைகுடா பகுதியில் அதிக அளவில் காணப்படும் கடல் வெள்ளரிகளைப் பிடிக்கவும், வாங்கி விற்கும் பணியிலும் சில கடத்தல்காரர்கள் ஈடுபட்டு வருவதாக கடலோரக் காவல் படையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து கூட்டு நடவடிக்கை குழு ஏற்படுத்தப்பட்டது.

இதனையடுத்து கடலோரக் காவல் படை ரோந்து கப்பல்கள், இடைமறிக்கும் படகுகள், ரோந்து விமானங்கள் தொடர்ச்சியாக தீவிரக் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

இந்நிலையில், சனிக்கிழமை நண்பகல் நேரத்தில் மன்னார் வளைகுடா பகுதியை ஒட்டி சர்வதேச கடல் எல்லையிலிருந்து சுமார் 3.5 கடல் மைல் தூரத்தில் வேகமாகக் சென்று கொண்டிருந்த படகு ஒன்றை கடலோரக் காவல்படையினர் மடக்கிப் பிடித்தனர். பின்னர் நடைபெற்ற சோதனையில் படகில் சுமார் ஆயிரம் கிலோ கடல் வெள்ளரிகள் என்ற தடை செய்யப்பட்ட  அட்டை வகைகள் இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து கடல் வெள்ளரிகளையும், படகினையும் பறிமுதல் செய்த கடலோராக் காவல்படையினர் மேல் நடவடிக்கைகளுக்காக தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.
       
இந்திய கடல்பகுதியில் சட்ட விரோதமாகப் பிடிக்கப்படும் இந்த அரிய வகை உயிரினங்கள் இலங்கை வழியாக கிழக்கு திசை நாடுகளுக்குக் கடத்தப்பட்டு உணவு மற்றும் மருந்து பொருள்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

சனிக்கிழமை பிடிக்கப்பட்ட கடல் வெள்ளரிகளும் இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டதும் தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட கடல் வெள்ளரிகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ. 5 கோடி இருக்கலாம்.  இக்கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையோர் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.