ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தளர்வில்லா பொதுமுடக்கம்: போடியில் இயல்பு நிலை

போடியில் ஞாயிறன்று தளர்வில்லா பொதுமுடக்கத்திலும் வழக்கம்போல் வாகனங்கள் இயங்கின. திருமண மண்டபங்களில் கூட்டம் களை கட்டியது.

News image
தளர்வில்லா பொதுமுடக்கம்: போடியில் இயல்பு நிலை 
Updated On :30 ஆகஸ்ட் 2020, 9:04 am

DIN

போடியில் ஞாயிறன்று தளர்வில்லா பொதுமுடக்கத்திலும் வழக்கம்போல் வாகனங்கள் இயங்கின. திருமண மண்டபங்களில் கூட்டம் களை கட்டியது.

ஜூலை மாதம் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லா பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, போடியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. ஆனால், அனைத்து இறைச்சிக் கடைகளும் வழக்கம்போல் திறந்திருந்தன.

மேலும், ஞாயிற்றுக்கிழமை சுபமுகூர்த்த நாள் என்பதால் திருமண மண்டபங்களில் கூட்டம் களை கட்டியது. சில திருமண மண்டபங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன. சாலைகளில் வாகனங்கள் வழக்கம்போல் இயங்கின. 

போடியில் பழைய பேருந்து நிறுத்தம், திருமலாபுரம், கருப்பசாமி கோவில், புதூர், வஞ்சி ஓடை தெரு, குலாளர்பாளையம், குப்பிநாயக்கன்பட்டி, சந்தை பேட்டை தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் ஆங்காங்கு கூட்டமாக அமர்ந்தும், சமூக இடைவெளியின்றியும், முகக்கவசம் அணியாமலும் பேசிக் கொண்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.