ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

முதல்வர் நிகழ்ச்சிக்கு விதிமுறை மீறி பேனர்: டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் முறையீடு

விதிமுறைகளை மீறி  முதல்வர் நிகழ்ச்சிக்காக கட்டவுட் போஸ்டர் வைக்கபட்டுள்ளதாக டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு.

News image
மதுரைக்கிளை நீதிமன்றம்
Updated On :4 டிசம்பர் 2020, 10:27 am

DIN

விதிமுறைகளை மீறி  முதல்வர் நிகழ்ச்சிக்காக கட்டவுட் போஸ்டர் வைக்கபட்டுள்ளதாக டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு.

மதுரையில் கூட்டு  குடிநீர் திட்டங்கள் தொடங்கி வைக்கும் நிகழ்வு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்துள்ளார். விழாவில், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

இதற்காக நகரின் முக்கிய பகுதிகளில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி கட் அவுட்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான செயலாகும்.

எனவே இந்த வழக்கை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் டிராபிக் ராமசாமி முறையீடு செய்தார்.

நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, விரிவாக மனுவை தாக்கல் செய்தால் விசாரிப்பதாக தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.