கந்தர்வகோட்டை தொகுதியில் மழை வெள்ளம்: எம்எல்ஏ நேரில் ஆய்வு

கந்தர்வகோட்டை பகுதிகளில் மழை வெள்ள சேத பாதிப்புகளை சட்டப்பேரவை உறுப்பினர் நார்த்தாமலை பா. ஆறுமுகம் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
கந்தர்வகோட்டை அருகே துவார் ஊராட்சியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த எம்.எல்.எ. நார்த்தாமலை பா. ஆறுமுகம்.
கந்தர்வகோட்டை அருகே துவார் ஊராட்சியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த எம்.எல்.எ. நார்த்தாமலை பா. ஆறுமுகம்.
Updated on
1 min read

கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை பகுதிகளில் மழை வெள்ள சேத பாதிப்புகளை சட்டப்பேரவை உறுப்பினர் நார்த்தாமலை பா. ஆறுமுகம் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயலால் கந்தர்வகோட்டை பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது, கந்தர்வகோட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட தூவார் ஊராட்சி, கென்டையன் பட்டி, கறம்பக்குடி, அம்பு கோவில், மங்களா கோவில் பகுதிகளில் கனமழை  சேதங்களை நேரில் ஆய்வு மேற்கொண்ட கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் நார்த்தாமலை பா. ஆறுமுகம், மழையில் சுவர் இடிந்த வீடுகளை ஆய்வு செய்து உரிய நிவாரணம் கிடைக்க ஆவனம் செய்தார். மழை நீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம் மழை நீரை விரைந்து வெளியேற்ற உத்தரவிட்டார். ஆய்வின் போது உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com