ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கிருஷ்ணகிரியில் கருப்புக்கொடி ஏந்தி திமுகவினர் போராட்டம்

கிருஷ்ணகிரியில் வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

News image
கிருஷ்ணகிரியில் கருப்புக்கொடி ஏந்தி திமுகவினர் போராட்டம்
Updated On :5 டிசம்பர் 2020, 7:56 am

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் டி. செங்குட்டுவன் எம்எல்ஏ தலைமை வகித்தார். மாநில விவசாய அணி துணை தலைவர் மதியழகன், துணைச் செயலாளர் வெங்கடேசன், பர்கூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் விவசாயிகளை பாதிக்கும் வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும், வேளாண் மசோதாக்களை குறித்து விவாதிக்க மக்களவையை கூட்ட வேண்டும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு தமிழக அரசு ஆதரிக்க கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் முழக்கங்களை எழுப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.