ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

திருப்பூரில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 300க்கும் மேற்பட்டோர் கைது

தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரியும் திருப்பூரில் திமுகவினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.

News image
திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்.
Updated On :5 டிசம்பர் 2020, 8:46 am

DIN



திருப்பூர்: தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரியும் திருப்பூரில் திமுகவினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.

திருப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள பெரியார், அண்ணா சிலைகளின் முன்பாக திமுக சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.செல்வராஜ் தலைமைவகித்தார். 

Story image

திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்.

இதில், பங்கேற்ற திமுகவினர் கூறியதாவது: தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்ட திருத்தங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்றனர். 

Story image

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தொமுச பேரவை துணைச் செயலாளர் டிகேடி மு.நாகராசன், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, சாலைமறியலுக்கு முயன்ற திமுகவினர் 300க்கும் மேற்பட்டோரை திருப்பூர் வடக்கு காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.