காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வேதாரண்யம் அருகே ஆற்றுக்குள் கவிழ்ந்த பெட்ரோல் நிரப்பிய லாரி பாதுகாப்பாக மீட்பு: பெரும் பாதிப்பு தவிர்ப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆற்றுக்குள் கவிழ்ந்த பெட்ரோல் நிரப்பிய டேங்கர் லாரியை தீயணைப்புத்துறையினர் உதவியுடன் பாதுகாப்பாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

News image

மருதூர் பகுதியில் ஆற்றுக்குள்ளிருந்து பாது காப்பாக மீட்கப்பட்ட பெட்ரோல் லாரி.

Updated On :6 டிசம்பர் 2020, 7:59 am

DIN

வேதாரண்யம்:  நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆற்றுக்குள் கவிழ்ந்த பெட்ரோல் நிரப்பிய டேங்கர் லாரியை தீயணைப்புத்துறையினர் உதவியுடன் பாதுகாப்பாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர் மழை நீடித்து வருகிறது.

Story image

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரண்யம் பகுதிக்கு பெட்ரோல் ஏற்றிய டேங்கர் லாரி ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.

டேங்கர் லாரி, மருதூர் தெற்கு, நடேசத்வேர் கடையடி பகுதிக்கு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இடது,   வலது பக்கமாக ஓடி, பக்கவாட்டில் செல்லும் மானங்கொண்டான் ஆற்றின் படுகையில் கவிழ்ந்தது.

Story image

மருதூர் பகுதியில் ஆற்றுக்குள்ளிருந்து பாது காப்பாக மீட்கப்பட்ட பெட்ரோல் லாரி.

சுமார் 12 ஆயிரம் லிட்டர்  பெட்ரோலுடன் லாரி கவிழ்ந்ததால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்துச் சென்ற வேதாரண்யம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள், இயந்திரங்களின் உதவியோடு பாதுகாப்பாக மீட்டனர். இதனால் பெரும் பாதிப்பு தடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.