ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஊத்துக்கோட்டையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் சாலை மறியல்

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக ஊத்துக்கோட்டையில் 500-க்கும் மேற்பட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.More than 500 DMK and allied parties staged a road blockade in Uth

News image
ஊத்துக்கோட்டையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் சாலை மறியல்
Updated On :8 டிசம்பர் 2020, 9:14 am

DIN

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக ஊத்துக்கோட்டையில் 500-க்கும் மேற்பட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஊத்துக்கோட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று நாடு தழுவிய அளவில் நடைபெறும் முழு அடைப்புக்கு ஆதவாக   தாமைரைப்பாக்கம் கூட்டுசாலையில்  திமுக விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், முஸ்லிம் லீக் மற்றும் இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் தமைரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் தில்லியில் 9600 டிராக்டர்கள் மற்றும ஒரு கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டி வேளாண் மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தியும் கடந்த சில வாரங்களாக போராடிவரும் விவசாயிகளை அழைத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்துக்கு முடிவு காண வேண்டும் என்பதை வலியுறுத்தியும் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சக்திவேல் தலைமையில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்ட 500 மேற்பட்டோரை கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இதில் திமுகவைச் சேர்ந்த தங்கம் முரளி,  சீனிவாசன், முனிவேல், பாஸ்கர், நாகலிங்கம்,  கோடுவெள்ளி சுமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் முருகன், பூந்தமல்லி தொகுதி செயலாளர் ஸ்ரீதர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தாமரைப்பாக்கம் சம்பத், பழனி, ரமகண்ணன், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மகேந்திரன், வெங்கல் சிவசங்கரன், உள்ளிட்ட ஏராளமானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட 500-க்கும் மேற்பட்டோரை காவலர்கள் கைது செய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். போராட்டம் காரணமாக  அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.