எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

வேதாரண்யம் பகுதிக்கு முதல்வர் வருகை: கொட்டும் மழையிலும் குடை பிடித்து மக்கள் வரவேற்பு

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில்  மழை வெள்ளத்தால்  ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொட்டும் மழையிலும் குடை பிடித்த மக்கள் வரவேற்றனர்.

News image
கள்ளிமேடு கிராமத்தில் முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய முதல்வர் .
Updated On :9 டிசம்பர் 2020, 6:48 am

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில்  மழை வெள்ளத்தால்  ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொட்டும் மழையிலும் குடை பிடித்த மக்கள் வரவேற்றனர்.

வேதாரண்யத்தை அடுத்த பழங்கள்ளிமேடு கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரத் காலமாக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள  160 குடும்பங்களைச் சேர்ந்த 364  பேர்களை அவர் சந்தித்தார்.

பின்னர், அனைத்து குடும்பங்களுக்கும்  அரிசி, பருப்பு , வேட்டி மற்றும் புடவை உள்ளிட்ட நிவரணப் பொருள்களை வழங்கினார்.

Story image

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொட்டும் மழையிலும் குடை பிடித்தப்படி வரவேற்ற மக்கள்.

வெள்ளத்தால் உயிரிழந்த நாகை மாவட்டம், திருச்சங்காட்டாங்குடி  கிராமத்தைச் சேர்ந்த மாலா என்பவரின் கணவர் பன்னீர்செல்வத்துக்கு ரூ.4 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

முகாம் வளாகத்தில் செயல்படும் சத்துணவு மையத்தில் சமையல் பணிகளை பார்வையிட்டார்.

மருத்துவத்துறையினர் ஏற்பாடு செய்திருந்த முகாமுக்கு சென்ற முதல்வர் சேற்றுப் புண்ணுக்கு தடவும் மருந்து குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

Story image

கள்ளிமேடு முகாமில் சமையல் செய்யும் உணவுகளை ஆய்வு செய்த முதல்வர்.

அமைச்சர்கள் வேலுமணி ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதல்வர் வருகைக்கு முன்பு திடீரென பலத்த மழைப் பொழிவு ஏற்பட்ட போதிலும் சாலையின் இரு புரங்களிலும் திரண்டிருந்த மக்கள், அதிமுக தொண்டர்கள் குடை பிடித்துக் கொண்டே வரவேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.