சென்னை: தனியார் சிமெண்ட் ஆலை குழுமத்திற்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, ஹைதராபாத் மற்றும் மும்பை உள்ளிட்ட 50 இடங்களில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலை குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் புதன்கிழமை காலை 8 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.