அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

விராலிமலை அருகே கார் கவிழ்ந்ததில் 3 பேர் பலி

மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேரிட்ட சாலை விபத்தில் 3 பேர் பலியாகினர். ஒருவர் ஆபத்தான நிலையில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News image
விராலிமலை அருகே கார் கவிழ்ந்ததில் 3 பேர் பலி (கோப்புப்படம்)
Updated On :27 ஜனவரி 2024, 6:06 pm

DIN

மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் நேரிட்ட சாலை விபத்தில் 3 பேர் பலியாகினர். ஒருவர் ஆபத்தான நிலையில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விராலிமலை அடுத்த கொடும்பாளூர் வடகாடு அருகே மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்துகொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததால் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், காரில் பயணம் செய்த நான்கு பேரில் மதுரையை சேர்ந்த பைசல், ரிசாத் மற்றும் நிலக்கோட்டையை சேர்ந்த அபுபக்கர் ஆகிய மூன்று பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் படுகாயங்களுடன் சுயநினைவை இழந்த முகமது கபியுல்லா என்பவர் ஆபத்தான  நிலையில் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.