தமிழகம் சீரழிந்துவிட்டது என்பதில் எந்த சந்தேகமுமில்லை: கமல்ஹாசன்
தமிழகம் சீரழிந்துவிட்டது என்பதில் எந்த சந்தேகமுமில்லை எனவும் இனி தமிழகத்துக்கு செய்ய வேண்டியதைப் பற்றி மக்கள் நீதி மய்யம் பேசும் எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


தமிழகம் சீரழிந்துவிட்டது என்பதில் எந்த சந்தேகமுமில்லை எனவும் இனி தமிழகத்துக்கு செய்ய வேண்டியதைப் பற்றி மக்கள் நீதி மய்யம் பேசும் எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன்,
மக்களின் வாழ்த்துகளுடன் இன்று பிரசாரத்தைத் துவங்குகிறோம். பல இடங்களில் அனுமதி வழங்கியிருக்கிறார்கள். ஆனால், கடைசி நிமிடத்தில் நகரங்களுக்குள் அனுமதி வழங்க மறுத்துள்ளனர். எங்கள் பிரசாரம் தொடங்கி விட்டதாவே கருதுகிறோம். சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டிய முறையில் செயல்படுவோம்.
புதிய ஒரு சீரமைத்த தமிழகத்தை உருவாக்குவதே எங்கள் தேர்தல் பிரசார நிலைப்பாடாக இருக்கும். தமிழகம் சீரழிந்துவிட்டது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அது மக்களுக்கும் தெரியும். மீண்டும் அதை புலம்பிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை
இனி செய்யவேண்டியதை பற்றி மக்கள் நீதி மய்யம் பேசும் என்று பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...