கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பொள்ளாச்சி அருகே இரு கார்கள் மோதி விபத்து: 2 பேர் பலி

பொள்ளாச்சி அருகே கெடிமேடு பகுதியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர், ஒருவர் படுகாயமடைந்தார்.

News image
விபத்துக்குள்ளான கார்.
Updated On :27 ஜனவரி 2024, 6:08 pm

DIN


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கெடிமேடு பகுதியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர், ஒருவர் படுகாயமடைந்தார்.

மதுரையில் இருந்து சதீஷ் அவரது மனைவி சண்முகப்பிரியா ஆகியோர் பொள்ளாச்சிக்கு புதன்கிழமை காலை காரில் வந்துள்ளனர். அப்போது பொள்ளாச்சியில் இருந்து உடுமலை சாலையில் எதிரே சென்ற கார் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் சதீஷ் மற்றும் சண்முகப்பிரியா ஆகியோர் லேசான காயம் அடைந்தனர்.

மற்றொரு காரில் வந்த நஞ்சே கவுண்டன் புதூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை(38) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Story image

விபத்துக்குள்ளான மற்றொரு​ கார்.

அவரது நண்பர் நாட்டுக்கல் பாளையத்தை சேர்ந்த விஜயகுமார்(40) என்பவர் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார்.

மேலும் காரில் பயணம் செய்த சூளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

விபத்து குறித்து கோமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.