வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மின்வாரியத்தில் தனியார் மூலம் நிரப்பப்பட உள்ள 30,000 காலிப் பணியிடங்கள்

மின்வாரியத்தில் 30,000 காலிப் பணியிடங்கள் தனியார் மூலம் நிரப்பப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News image
மின்வாரியத்தில் 30,000 காலிப் பணியிடங்கள் தனியார் மூலம் நிரப்பப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Updated On :17 டிசம்பர் 2020, 1:53 pm

DIN

சென்னை: மின்வாரியத்தில் 30,000 காலிப் பணியிடங்கள் தனியார் மூலம் நிரப்பப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக மின்வாரியத்தில் வயர் மேன், ஹெல்ப்பர் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. இவற்றை தற்காலிக ஊழியர்களைக் கொண்டு நிரப்புவதும், அதன்பின்னர் அவர்கள் பணிமூப்பு அடிப்படையில் நிரந்தரம் செய்யப்படுவதும் வழக்கமாகும்.

இந்நிலையில் மின்வாரியத்தில் உள்ள 30,000 காலிப் பணியிடங்கள் தனியார் மூலம் நிரப்பப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக மின்துறையில் இருந்து ஒவ்வொரு மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திற்கும் ரூ.1.8 கோடி நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அத்துடன் மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் 20 பேரை தனியார் நிறுவனம் பணியமர்த்திக் கொள்ள அனுமதி அளித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள ஐ.டி.ஐ படித்த இளைஞர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.