கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ரூ.12.87 லட்சம் மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா

கும்மிடிப்பூண்டி அடுத்த மங்களம் ஊராட்சியில் ரூ.12.87 லட்சம்  மதிப்பீட்டில் 101 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் கால்நடை துறை சார்பில் வழங்கப்பட்டது.

News image
கும்மிடிப்பூண்டி அடுத்த மங்களம் ஊராட்சியில் ரூ.12.87 லட்சம் மதிப்பீட்டில் 101 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டது.
Updated On :27 ஜனவரி 2024, 6:09 pm

DIN

கும்மிடிப்பூண்டி அடுத்த மங்களம் ஊராட்சியில் ரூ.12.87 லட்சம்  மதிப்பீட்டில் 101 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் கால்நடை துறை சார்பில் வழங்கப்பட்டது.

கால்நடை துறை மண்டல உதவி இயக்குநர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் கால்நடை துறை உதவி இயக்குநர் கோபி கிருஷ்ணன் மேற்பார்வையில் கும்மிடிப்பூண்டி அடுத்த மங்களம் ஊராட்சியில் தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா ஊராட்சி தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் முக்கரம்பாக்கம் கால்நடை மருத்துவர் முருகன் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர்கள் தேவி சங்கர், ஏ.டி.நாகராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் வெங்கடேசன், சரவணன், ஊராட்சி துணை தலைவர் எஸ்.வினோத்குமார் முன்னிலை வகித்தனர்

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், ஒன்றிய அதிமுக செயலாளர்  கோபால்நாயுடு, மாநில அதிமுக மீனவரணி துணை செயலாளர் ஜெ.சுரேஷ் பங்கேற்று  மங்களம் கிராமத்தைச் சோ்ந்த 101 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள், கொட்டகை அமைத்தல், ஆடுகளை பராமரிக்க பயிற்சி பெறுதல், போக்குவரத்து, காப்பீடு உள்ளடங்கிய ஒவ்வொருக்கும் ரூ.12,750 மதிப்பில் மொத்தம் 12 லட்சத்து 87ஆயிரத்து மதிப்பிலான ஆடுகள் வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் அரசு வழங்கும் இந்த ஆடுகளை பயனாளிகள் முறையாக வளர்த்து தங்கள் பொருளாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

நிகழ்வில் பேசிய மங்களம் ஊராட்சி தலைவர் சுரேஷ் மங்களம் ஊராட்சி மக்கள் ஆரணி ஆற்றை கடந்து அவர்கள் தேவைக்கு ஆரணி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலையில் தரைபாலம் இல்லாத சூழலில் 1கி.மீ சாலயை கடக்க பொதுமக்கள் 10 கி.மீ தொலைவு சுற்றி செல்ல வேண்டி இருப்பதால் தங்கள் பகுதியில் ஆரணி ஆற்றை கடக்க தரைபாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.