சென்னை: ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளபடி செய்துவிட்டது.
ஜாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்ப நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் ஆனந்த பாபு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஜாதி இல்லாத சமுதாயத்தை நோக்கிச் செல்லும் நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு ஏன் நடத்த வேண்டும்? என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.