விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கோவை பகுதியில் 50 ஆண்டுகளாக தானிய சேமிப்பு கிடங்குகள் இல்லை: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

கோவை பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக தானிய சேமிப்பு கிடங்குகள் ஏதும் இல்லாததால் விவசாயிகள் பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளதாக பாஜக அகில இந்திய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டினார். 

News image
கோவையில் டிராக்டர் ஓட்டி பிரசார ஊர்வலத்தை துவக்கி வைத்த வானதி சீனிவாசன்
Updated On :18 டிசம்பர் 2020, 8:33 am

DIN

கோவை பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக தானிய சேமிப்பு கிடங்குகள் ஏதும் இல்லாததால் விவசாயிகள் பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளதாக பாஜக அகில இந்திய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டினார். 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களில் உள்ள நன்மை குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோவையில் டிராக்டர் ஊர்வலம் நடைபெற்றது. பேரூரில் துவங்கிய இந்த பிரசார ஊர்வலத்தை பாஜக அகில இந்திய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

Story image

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயத் துறையில் இருக்கின்ற விவசாயிகளுக்கு இந்த மூன்றும் வேளாண் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டிராக்ட்டர் பிரசாரம் மேற்கொள்கிறோம். 

தில்லியில் விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் அப்பாவி விவசாயிகளில் வாழ்க்கையோடு எதிர்க்கட்சிகள் விளையாடுகின்றனர். இதுவரை தங்கள் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்காக உதவி செய்வோம், விளைபொருளுக்கான சந்தை உருவாக்குவோம் என தேர்தல் அறிக்கையில் கூறிய காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சியினர் விவசாயிகளுக்கு ஏதும் செய்யவில்லை, அவர்கள் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதை பிரதமர் மோடி சட்டமாக்கி விவசாயிகளுக்கு உதவி செய்யும் போது அதை அரசியலாக்கி வருகின்றன.

Story image

விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கு என்ன தேவையோ அதற்கான முழுத் தொகை வழங்கப்பட்டது. விவசாயிகள் விளைவித்த பொருளுக்கு விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதை அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கின்றனர்.

திடீரென பச்சை துண்டை போட்டுக் கொண்டு வந்தால் விவசாயிகள் நம்ப மாட்டார்கள் என தெரிவித்தார். 

Story image

புதிய பாராளுமன்றம் குறித்து கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு பதில் அளித்தவர், அரசியல் கட்சி ஆரம்பித்து தேர்தலில் நின்ற அவர் கரோனா காலத்தில் பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்த நிலையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என குற்றம் சாட்டினர். 

மேலும் தொண்டாமுத்தூர் பகுதியில் திராட்சை விவசாயம் மற்றும் சின்ன வெங்காயம் அதிகமாக விளைவிக்கப்பட்டு வந்த நிலையில், குளிர்பதன கிடங்குகள் இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அதுபோன்ற குளிர்பதன கிடங்குகள் அம்பானி, அதானி என யார் வேண்டுமானாலும் இது போன்ற சேமிப்பு கிடங்கு அமைக்கலாம் என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.